பல்லவி
மனஸு நில்ப ஸ1க்தி லேக போதே
மது4ர க4ண்ட விருல 1பூஜேமி ஜேயுனு
அனுபல்லவி
க4ன து3ர்மது3டை3 தா முனிகி3தே
காவேரி 2மந்தா3கினியெடு ப்3ரோசுனு (ம)
சரணம்
3ஸோமித3ம்ம ஸொக3ஸு-கா3ண்ட்3ர கோரிதே
4ஸோம யாஜி 5ஸ்வர்கா3ர்ஹுடௌ3னோ
6காம க்ரோது4டு3 தபம்பொ3னர்சிதே
காசி ரக்ஷிஞ்சுனோ த்யாக3ராஜ நுத (ம)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மனஸு/ நில்ப/ ஸ1க்தி/ லேக போதே/
மனதை/ யடக்க/ திறமை/ இன்றேல்/
மது4ர/ க4ண்ட/ விருல/ பூஜ/-ஏமி/ ஜேயுனு/
இனிய/ மணி/ மலர்களின்/ பூசை/ என்ன/ செய்யும்/
அனுபல்லவி
க4ன/ து3ர்மது3டை3/ தா/ முனிகி3தே/
மிக்கு/ தீய செருக்குடைத்து/, தான்/ முழுகினால்/
காவேரி/ மந்தா3கினி/-எடு/ ப்3ரோசுனு/ (ம)
காவேரியும்/ மந்தாகினியும்/ எவ்விதம்/ காக்கும்/
சரணம்
ஸோமித3ம்ம/ ஸொக3ஸு-கா3ண்ட்3ர/ கோரிதே/
சோமயாஜியின் மனையாள்/ காதலனை/ விழைந்தால்/
ஸோம யாஜி/ ஸ்வர்க3/-அர்ஹுடு3/-ஔனோ/
சோமயாஜி/ வானுலகத்திற்கு/ தகுதி/ பெறுவானோ/
காம/ க்ரோது4டு3/ தபம்பு3/-ஒனர்சிதே/
இச்சை/ சினம் இவை யுடையோன்/ தவம்/ இயற்றினால்/
காசி/ ரக்ஷிஞ்சுனோ/ த்யாக3ராஜ/ நுத/ (ம)
பழுத்து/ காக்குமோ/தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பூஜேமி - பூஜயேமி
மேற்கோள்கள்
2 - மந்தா3கினி - கங்கையின் உப நதி - கங்கையின் மற்றொரு பெயர் - வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயம் 95-ன் படி, ராமன், சீதை மற்றும் லக்ஷ்மணனுடன் காட்டில் முதலில் தங்கிய சித்ரகூடத்திற்கருகில் ஓடும் ஒரு நதிக்கும் மந்தாகினி என்று பெயருண்டு. ஆனால் இவ்விடத்தில் கங்கையைக் குறிக்கும்.
3 - ஸோமித3ம்ம - சோமயாஜியின் மனைவி
4 - ஸோம யாஜி - சோமயாகமெனும் வேள்வி இயற்றுபவன் - சோம யாகத்தினைப் பற்றிய முழு விவரங்கள் யஜுர் வேதம் - 6-வது காண்டத்தில் காண்க
Top
விளக்கம்
5 - ஸ்வர்கா3ர்ஹுடௌ3னோ - இந்து மதத்தின் கோட்பாடுகளின்படி, மனைவியின்றி வேள்வி இயற்ற ஒருவனுக்கு அருகதையில்லை. எனவே, மனைவி கற்பு தவறினால் கணவன் இயற்றும் வேள்விகளுக்கு எந்தவித பயனும் கிட்டாது.
இந்த மேற்கோள் உடலுக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பினைக் குறிக்கும். மனம்-சொல்-செய்கை இவை மூன்றிலும் வேறுபாடின்றி இயற்றப்படும் செயல்கள் மட்டுமே முழுமை பெறும். இதனை த்ரி-கரண ஸு1த்3தி4 என்பர். அம்மாதிரியின்றி மனமோரிடமும் உடலோரிடமும் இருக்க இயற்றும் செயல்கள் வீணே. மனத்தையடக்கும் 'அத்3வைத சாத4னை' என்ற காஞ்சி மாமுனிவரின் சொற்பொழிவுகளை - (download) நோக்கவும்
'மனஸு ஸ்வாதீ4னமைன' எனும் ஸ1ங்கராப4ரண ராக கீர்த்தனையில் தியாகராஜர் 'மனது தன்வயப்பட்டவனுக்கு வேறு மந்திர தந்திரங்கள் ஏன்?' என்று கேட்கின்றார்.
6 - காம க்ரோது4டு3 - இச்சை, சினம் ஆகியவை - உட்பகை ஆறு
மணி - வழிபாட்டில் அடிக்கு மணி
முழுகு - புனித நீராடல்
காதலன் - கள்ளக் காதலன்
பழுத்து - தவத்தைக் குறிக்கும்
Top